டெங்கு காய்ச்சலுக்கு போலி மருத்துவம் பார்த்தவர் கைது!

டெங்கு காய்ச்சலுக்கு போலி மருத்துவம் பார்த்தவர் கைது!
கோவை(13 அக் 2017): ஏழே நாளில் டெங்கு காய்ச்சலை குணப்படுத்துவதாகக் கூறி போலி மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை ராமநாதபுரம் பகுதியில் சன் லைப் ஹெல்த் சொல்யூசன் என்ற பெயரில் ராபர்ட் சாக்கோ என்பவர் மருத்துவம் பார்த்து வந்தார். இவர் இயற்கை மருத்துவ முறையில் நானோ தொழில் நுட்பத்தில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுமென விளம்பரம் செய்துள்ளார். மேலும் 3 முதல் 7 நாட்களில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு நிவாரணம் அளிக்கப்படுமெனவும், 30 நாட்களில் புற்றுநோய், சிறுநீரகம், கல்லீரல் செயழிலப்பு, இருதய அடைப்புகள் சரி செய்யப்படுமெனவும் விளம்பரப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக வந்த புகாரின் பேரில், கோவை மண்டல சுகாதர பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் சந்திரசேகர் சோதனை மேற்கொண்டார். அதில் ராபர்ட் சாக்கோ பிஏ பொருளாதாரம் படித்து விட்டு, மருத்துவம் பார்ப்பதாக தெரியவந்ததை அடுத்து, ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ராபர்ட் சாக்கோவை கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெங்கு காய்ச்சலுக்கு போலி மருத்துவம் பார்த்தவர் கைது! டெங்கு காய்ச்சலுக்கு போலி மருத்துவம் பார்த்தவர் கைது! Reviewed by நமதூர் செய்திகள் on 04:09:00 Rating: 5

No comments:

Powered by Blogger.