சிறுபான்மையினரை அவமதித்து பேசிய பா.ஜ.க. துணைத் தலைவர் எச்.ராஜா மீது SDPI கட்சி புகார்



சிறுபான்மையினரை அவமதித்து பேசிய பா.ஜ.க. துணைத் தலைவர் எச்.ராஜா மீது SDPI கட்சி புகார்

சென்னை, ஜன. 18–
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வடசென்னை மாவட்ட பொதுச் செயலாளர் கரீம், செயலாளர் கோபிநாத், மத்திய சென்னை மாவட்ட பொது செயலாளர் சாகுல், தென் சென்னை மாவட்ட பொது செயலாளர் நேதாஜி உமர் மற்றும் நிர்வாகிகள் ஒரு புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:–
‘‘பாரதீய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவராக இருக்கும் எச்.ராஜா முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும், பெரியாரை பற்றியும் அவதூறாக பேசியிருக்கும் வீடியோ காட்சி யூடியூப்பில் வெளியாகி இருக்கிறது. எனவே அவர் மீது தகுந்த சட்டபிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புகார் மனுவுடன் வீடியோ ஆதாரங்களையும் நிர்வாகிகள் கொடுத்தனர்.

சிறுபான்மையினரை அவமதித்து பேசிய பா.ஜ.க. துணைத் தலைவர் எச்.ராஜா மீது SDPI கட்சி புகார் சிறுபான்மையினரை அவமதித்து பேசிய பா.ஜ.க. துணைத் தலைவர் எச்.ராஜா மீது SDPI கட்சி புகார் Reviewed by நமதூர் செய்திகள் on 02:07:00 Rating: 5

No comments:

Powered by Blogger.