உணவில்லை: யர்முக் முகாமில் 41 ஃபலஸ்தீனர்கள் மரணம்!


உணவில்லை: யர்முக் முகாமில் 41 ஃபலஸ்தீனர்கள் மரணம்!

டமஸ்கஸ்: உணவும், மருந்தும் கிடைக்காததால் சிரியாவில் உள்ள யர்முக் அகதிகள் முகாமில் கடந்த 2 வாரங்களில் குழந்தைகள், பெண்கள் உள்பட 41 ஃபலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். தெற்கு டமஸ்கஸில் யர்முக் முகாம் அடங்கிய பகுதி போராளிகளின் கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு சிரியா ராணுவம் முகாமிற்கு உணவைக் கொண்டு செல்ல தடை விதித்துள்ளது.
ஊட்டச்சத்துக் குறைவினால் 24 பேர் மரணமடைந்துள்ளனர். மீதமுள்ளவர்கள் சிகிச்சை கிடைக்காததால் மரணித்துள்ளனர். லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமை அமைப்பு இத்தகவல்களை வெளியிட்டுள்ளது. யர்முக்கில் ஃபலஸ்தீன மக்களுக்கான முகாமின் சூழல் மோசமாக உள்ளதாக ஃபலஸ்தீன மக்களுக்கான ஐ.நா. ஏஜன்சி எச்சரிக்கை விடுத்தபோதும் சிரியா அரசு புறக்கணித்து விட்டது.
முகாமிற்கு உணவும், குடிநீரும் செல்வதை சிரியா சர்வாதிகார அரசு தடுத்துள்ளது. போராளிகளுக்கு ஃபலஸ்தீன மக்கள் ஆதரவளிக்கிறார்கள் என்பது சிரியா சர்வாதிகார அரசின் குற்றச்சாட்டாகும். அதேவேளையில் ஹும்ஸில் ராணுவத் தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த தாக்குதல்களில் 95 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹமா, இத்லிப், ஹலப், தர்ஆ ஆகிய இடங்களில் மரணித்தவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
உணவில்லை: யர்முக் முகாமில் 41 ஃபலஸ்தீனர்கள் மரணம்! உணவில்லை: யர்முக் முகாமில் 41 ஃபலஸ்தீனர்கள் மரணம்! Reviewed by நமதூர் செய்திகள் on 00:03:00 Rating: 5

No comments:

Powered by Blogger.