வி.களத்தூர் ஊராட்சியில் இன்று அங்கன்வாடி மைய திறப்பு


பெரம்பலூர் மாவட்டம்: வி.களத்தூர் ஊராட்சியில் ஏரிக்கரை சின்ன தெருவில்புதிதாக கட்டியுள்ள அங்கன்வாடி மைய திறப்பு விழா இன்று மதியம் 1.௦௦ மணி அளவில் நடந்தது.
வி. களத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட அங்கன்வாடி ரூ. 6.5 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது.
வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ஜெயலட்சுமி தலைமை தாங்கி, திறந்து வைத்தார். வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) அவர்கள் சிறப்பித்து பேசினார்கள், வி.களத்தூர் ஊராட்சி மன்றம் தலைவர் நூருல்ஹுதா இஸ்மாயில் விளக்கு ஏற்றி சிறப்பிதார். உடன் முன்னால் வி.களத்தூர் ஊராட்சி மன்றம் தலைவர் AM முகமது இஸ்மாயில் அவர்கள் கலந்து கொண்டார்கள் இந்த பகுதி பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அங்கன்வாடி மையதிற்கு வந்திருந்த குழந்தைகளுக்கு வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ஜெயலட்சுமி  சத்துணவு வழங்கினார்.




வி.களத்தூர் ஊராட்சியில் இன்று அங்கன்வாடி மைய திறப்பு வி.களத்தூர் ஊராட்சியில் இன்று அங்கன்வாடி மைய திறப்பு Reviewed by நமதூர் செய்திகள் on 04:47:00 Rating: 5

No comments:

Powered by Blogger.