வி.களத்தூர் அருகே அடையாளம் தெரியாத இளம்பெண் கொலை

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே அடையாளம் தெரியாத இளம்பெண்
ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது வியாழக்கிழமை இரவு தெரிய வந்தது.
பசும்பலூரிலிருந்து கொரக்காவாடி செல்லும் சாலையில் உள்ள முனியப்பன் கோவில் அருகே வெள்ளாற்றங்கரையில் சுமார் 25 வயதுள்ள இளம்பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் கிடப்பதாகவும், உடல் அழுகிய நிலையில் இருப்பதாகவும் பசும்பலூர் வடக்கு (பொ) கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், வி.களத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொ) தே. சிவசுப்ரமணியன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.


வி.களத்தூர் அருகே அடையாளம் தெரியாத இளம்பெண் கொலை  வி.களத்தூர் அருகே அடையாளம் தெரியாத இளம்பெண் கொலை Reviewed by நமதூர் செய்திகள் on 19:50:00 Rating: 5

No comments:

Powered by Blogger.