ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை: டெல்லியில் டென்மார்க் சுற்றுலா பயணி பாலியல் பலாத்காரம்!


ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை: டெல்லியில் டென்மார்க் சுற்றுலா பயணி பாலியல் பலாத்காரம்!

புதுடெல்லி: மத்திய டெல்லியில் ஒரு டென்மார்க் பெண்ணை ஒரு கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து டெல்லி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை மாலை டெல்லியில் பஹர்கஞ் என்ற இடத்தில் தான் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து வழி தவறிய, இந்த 51 வயது பெண் சுற்றுலா பயணியை ஒரு கும்பல் தாக்கி அவரிடமிருந்த பொருட்களைக் கொள்ளையடித்து, அவர் கத்தி முனையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் காவல் துறை கூறுகின்றனர்.  புதன்கிழமை காலை அந்த பெண் இந்தியாவிலிருந்து வெளியேறியதாக தகவல்கள் கூறுகின்றன. 2012 ஆண்டு டெல்லியில் ஒரு பேருந்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட மாணவி இறந்ததைத் தொடர்ந்து இந்தியாவில் பாலியல் வன்முறை மீதான கவனம் அதிகரித்துள்ளது. அந்த வன்முறை சம்பவம் தொடர்பாக நடைபெற்ற போராட்டங்களை தொடர்ந்து, இந்திய அரசாங்கம் பாலியல் வன்முறை மீதான சட்டங்களை கடுமையாக்கியுள்ளது. அந்த பெண் தனது ஹொட்டல் சென்றடைந்தவுடன், அதன் மேலாளரிடம் இந்த சம்பவத்தை கூறியதாகவும், மேலாளர் காவல் துறையை அனுகி பின் காவல் துறை விசாரணை செய்து வருவதாகவும் போலிஸ் துறைக்காகப் பேசவல்ல ராஜன் பகத் தெரிவித்தார்.இது தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. டெல்லியின் மத்தியில் உள்ள கனாட் பிலேஸ் என்ற இடத்திற்கு மிக அருகில் உள்ள பஹர்கஞ் அதிக வெளிநாட்டு சுற்று பயணிகள் வந்து போகும் இடமாகும். கடந்த மார்ச் மாதம் மத்திய பிரதேசத்தில் ஒரு சுவிட்சர்லாந்து சுற்றுலாப் பயணி, ஒரு கும்பலால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அச்சம்பவத்தில் அவருடைய கணவரும் தாக்கப்பட்டார். அந்த குற்றத்திற்காக கடந்த ஜூலை மாதம் 6 பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு ஆயுள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை: டெல்லியில் டென்மார்க் சுற்றுலா பயணி பாலியல் பலாத்காரம்! ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை: டெல்லியில் டென்மார்க் சுற்றுலா பயணி பாலியல் பலாத்காரம்! Reviewed by நமதூர் செய்திகள் on 00:06:00 Rating: 5

No comments:

Powered by Blogger.