கடலில் குளித்த தந்தை, மகன் பலி - சுற்றுலா சென்றபோது பரிதாபம்!

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி கடலில் குளிக்கச் சென்ற தந்தை மகன் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாகப்பட்டினம்:சிவகங்கை மாவட்டம், காரைக்குடி முத்துப்பட்டினத்தை சேர்ந்தவர் சித்திரை சேகர். இவரது மகன் மகேஷ் மற்றும் உறவினர்கள் உள்பட 15 பேர் நேற்று வேனில் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தனர். மதியம் சித்திரை சேகர் மற்றும் அவரது மகன் இருவரும் வேளாங்கண்ணி கடலில் குளிக்கச்சென்றனர்.
அப்போது மகேஷ் கடல் அலையில் சிக்கிக்கொண்டார். இதனைப்பார்த்த சித்திரைசேகர் மகனை காப்பாற்ற சென்றபோது அவரையும் அலை இழுத்துச் சென்றது. அருகிலிருந்தவர்கள் தீயணைப்பு படை வீரர்களிடம் தகவல் கூறினார். பின்னர் இரண்டு மணிநேரம் கழித்து இருவரது உடல்களும் கரை ஒதுங்கியது. பின்னர் உடல்களை சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வைகை அனிஷ்
கடலில் குளித்த தந்தை, மகன் பலி - சுற்றுலா சென்றபோது பரிதாபம்! கடலில் குளித்த தந்தை, மகன் பலி - சுற்றுலா சென்றபோது பரிதாபம்! Reviewed by நமதூர் செய்திகள் on 18:15:00 Rating: 5

No comments:

Powered by Blogger.