மன அழுத்த‍ம் ஏற்படுவதற்கான காரணங்களும் அதற்கான தீர்வுகளும்!

மனிதனுக்கு ‘மன அழுத்தம் ‘ என்னும் வியாதி தான் கொடிய வியாதி. அது சப்தமில்லாமல் நம்மை கொஞ்சம்கொஞ்சமாக உயிரை எடுக் கும். அதை மனிதனை அளிக்கும் ‘எமன் என்றுகூட சொல்லலாம். அது எதனா ல் வருகின்றது மற்றும் அதற்கான தீர் வுகளைப் பார்ப்போம்.
வரும் காரணம் : 1
மனதில் ‘தாழ்வு மனப்பான்மை மேலோங்கி நிர்ப்பது. தான் மற்றவர்களைக் காட்டிலும் எல்லாவிதத்திலும்
குறைந்தவ ன் அல்லது தனக்கு மதிப்பு ஏதுமில்லை என் ஒரு உணர்வு.
அதன் தீர்வு : 1
இப்போது இருக்கும் நிலைமை யை மட்டும் வைத்து எண்ணிக் கொண்டு இருக்காதே! உனது வா ழ்க்கையைவிட மோசமாக உள்ள, சாவின் விளிம்பில் நின்றுகொண் டிருக்கும் கோடிகணக்கான மக்க ளின் வாழ்கையை ஒருமுறைபா ர். அவர்களே நம்பிக்கையோடு கா லம் தள்ளுகின்றபோது உன்னால் வாழமுடியாதா! தாழ்வு மனப்பான்மையை உன் மனதிலிருந்து அகற்றிவிடு. உன் வாழ்கையை உயர்த்த வரும் உழைப்பு, முயற் சி என்கிற அழகிய தங் க ரதம் உன் பக்கத்தில் நிற்கிறது. உனது தாழ் வு மனப்பன்மையை தூ க்கி எற அந்த ரத்தத்தில் ஏறிக்கொண்டு வீறுந டை போடு. அதில் உன்னைபோன்று பாதித்தவர்களை ஏற்றி க்க அவர்களுக்கு புதுதெம்புகொடு. இன்றிருக்கும் நிலைமை நிரந்தரமானவை அல்ல. மாறக்கூடியவை. மன மகிழ்ச்சி கொள். அனைத்தும் சரியாகிவிடும்.
வரும் காரணம் : 2
வாழ்வில் எவ்வித பிடிப்புமி ல்லாமல் வீணான கற்பனை கள், எண்ணங்களை வளர் த்து கொண்டு ‘தன்னம்பிக் கை இல்லா மல் இருப்பது.
அதன் தீர்வு : 2
அதற்கு காரணம் ‘பயம்’ தான். யாரைக்கண்டும் பயப்பட தேவையில்லை! அவர்களும் உன்னைப்போன்ற மனிதர்கள்.
அவர்கள் வானத்திலிரு ந்து குதித்தவர்கள் கி டையாது. அவர்களுக் கென்று தனிப்பட விதத் தில் ‘பலம்’ தனியாக இ ருப்பதி ல்லை. உன்னா லும் பலம் பெறமுடியும். அதற்கு ‘தன்னம்பிக் கை ‘ கொள். உன் வாழ்வில் பிடிப்பு தானாக வரும்.
வரும் காரணம் : 3
பிறர் சுட்டெரிக்கும் வார்த்தைகளால் பேசி அவமதிப்பது.கௌரவத்தை குலைப்பது, உண்மைக்குப் புறம்பாகபழிகளை சுமத்துவது போ ன்றவற்றை பெரிதாக‌ எண் ணி  மனதளவில் வருந்திக் கொண்டிருப்பது.
அதன் தீர்வு : 3
வாழ்கையில் முன்னேறும்போது ‘விமர்சனங்கள்’ வரத் தான் செய்யும். அதைப்பற்றி அதிகம் கவலைப் படாமல் , உதறி தள் ளிவிட்டு உன்னுடைய குறிக்கோளை நோக்கி பயணம் செய்து கொண்டிரு. அப்போதுதான் அவைகள் உன் காதில் விழாது . வெற்றி உனதே!
வரும் காரணம் : 4
தொழில்களில் அல்லது வேலையில் முடிவு எடுக்கமுடியாமல் திணறுவது, செய்யும் காரியத்தில் முழு ஈடுபாடு செலுத்த முடியாமல் கவனக் குறைவா க செயல்படுவது, மறதியின் காரண மாக பல பிரச்சனைகள் உருவாவது.
அதன் தீர்வு : 4
முடிவு இடிப்பது, வேலை யில் கவனக்குறைவு, மறதி ஆகிய வற்றிக்குக் காரணம் மனம் ஒரு முகப்படுத்த முடியாமல் இருப்பது. அதை களைவதற் கு தியான பயிற்சி சிறிதளவு தினமும் மேற்கொள்ளுங்கள். நாளடைவில்  அனைத்திலும் தேர்ச்சி பெறுவீகள்.
வரும் காரணம் : 5
சில நேரத்தில் வழக்கமாக இருக்கும் சூழ்நிலைகள் பதிலாக புதிய சூழ்நிலைக்கு மாறும் போது , அதை சமாளிக்க வழி தெரியாமல் திணறுவது, புதிய உணவு மற்றும் உறவுகளில் மாற்றங்கள், தூங்கும் நேரத்தில் பெரிய மாறுதல்களை எதி ர்கொள்ள முடியாமல் திண்டாடுவது.
அதன் தீர்வு : 5
எவருக்குமே சூழ்நிலைகள் மாறும்போது அனைத்துமே புதி யதா கூச்சமாகவும், யாரிட த்தில் என்ன கேட்பது என்று குழம்புவதும் , தான் மட்டும் தனியாக இருப்பது போன்ற பிரமையும் உண்டாகும். அந்த சமயங்களில், தான் ம ட்டுமே அதிகமாக கஷ்டப்ப டுவது போலவும் ஒரு உண ர்வு உண்டாகும். ஆனால் பழக பழக அந்த சூழ்நிலைகள் உ ங்களுக்கு பிடிக்கத் துவங்கிவிடும். அதுவரை பொறுமையு டன் மாற்றத்திற்கேற்ப அனுசரி த்து நடந்து கொண்டால் அந்த சூழ்நிலை உங்களுக்கு சாதக மாக மாறிவிடும். ஆத்திரப்பட் டு அப்போது சட்டுபுட்டென்ற மு டிவு எடுத்து விடக்கூடா து. அப் படி எடுக்கும் முடிவு சரியாக இ ருக்காது. பொறுமை கொள். உனக்கேற்ற வாறு சூழ்நிலைக ள் மாறும்.
வரும் காரணம் : 6
வேலை, வேலை என்று ஓய்வி ல்லாமல் , மனதிற்கு சிறிதளவு கூட ஓய்வு கொடுக்காமல் இரு ப்பதும், பிரச்சனைகளை எதிர் கொள்ள முடியாமல் கலங்கி நிற்பது.
அதன் தீர்வு : 6
‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது சரிதான். ஆனால் உடலை, மனதை வருத்திக் கொண்டு உடல் ஆரோக்கிய ம் இழந்துவிடக்கூடாது. வே லைக்கு நேரம் ஒதுக்க வே ண்டும். அதில் தவறில்லை. ஆனால் அதுவே பல புது பி ரச்சனைக்கு வழிவகுக்கக் கூடாது. உடல், மனதிற்கு கட் டாயம் நிம்மதியான ஓய்வு தேவை. அது தூங்குவதால் மட்டுமே சாத்தியமாகும். அத ற் காக ஒரு நாள் பிக்னிக், வெளி, உள்நாடு சுற்றுப் பயணம் மேற்கொள்வ தால் மனதில் உற்சாக மும், உடலில் புத்துணர் ச்சியும் உண்டாகும். பிர ச்சனையினால் ஏற்படு ம் கலக்கம் மறைந்து அதை எதிர்கொள்ளும் மனவலிமை கிடைக்கின் றது.
வரும் காரணம் : 7
தோல்விகளையே நினைத்துக்கொண்ட மனச் சோர்வையும், மன உறுதியையும் இழத்தல்.
அதன் தீர்வு : 7
‘தோல்வி’ என்பது ஒரு பனிப்பாறை. வெப்பம்தாக்காத வரையில் அதன் உறுதி ‘டைட்டானிக்’ போன்ற மிகப்பெரிய கப்பலையே   கவி ழ்த்து விடுமளவிற்கு வரும். ஆனால் முயற்சி மற்றும் கடின உழைப்பு என்னும் வெப்பம்அதன்மீது படும்போது , அந்த மலை போன்ற பனிப் பாறை உருகி இருந்த இடம் தெரியாம ல் மறைந்துவிடும் . ஆகையா ல் தோல்வி ஏற்படும்போது உழைப்பையும், முய ற்சியையும் விட்டுவிடக் கூடாது.
வரும் காரணம் : 8
அன்பு உள்ளங்களை எதிர்பாராமல் இழக்கும்போது அதனா ல் தற்கொலை பற்றிய எண்ணங்களை வளர்த்துக் கொ ள்ளு ம் போதும் ….
அதன் தீர்வு : 8
எதிர்பாராமல் அன்புள் ளங்களை இழக்கும்போ து மாமதி பூக ம்பங்கள், எரிம லை மற்றும் சுனாமி போன்ற ஆபத்தான உணர்வுகள் ஓங்கிவரும். உன் மனஉறுதி கொண்டு பூகம் பத்தை நிறுத்து, அன்பு, சாந்தம், இரக்க குண த்தை அதிகரித்து எரிமலையை செய். தன்ன ம்பிக்கை கொண்டு சுனாமி அலை நீ நினை ப்பது இனி நடக்கும்.
வரும் காரணம் : 9
பிறர் உதவியால் எளிதாக தீர்க்கும் பிரச் சனைகளை மனதிலே அடக்கிக் கொண்டு , பிறரிடம் அந்த பிரச்சனை மற்றும் உண ர்வுகளை பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது ….
அதன் தீர்வு : 9
நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை உங் களுக்குப் புதிதாக இருக்கலாம். ஆனால்அதே பிரச்சனையை எதிர்கொண்டு சிலர் எளிதாக தீர்த்து வெற்றி கண்டி ருப்பார்கள். அவர்களிடம் பிரச்னை யை பகிர்ந்துகொண்டு அதன்படி நட ந்தால் கைமேல் பலன் கிடைக்கு ம். அப்படிப்பட்ட நபர்களின் நன்பகத் தன்மையை கண்டிப்பாக உறுதி செ ய்து கொள்ள வேண்டும்.
வரும் காரணம் : 10
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்ப டும் தொந்தரவி னால் எப்போதும் அழுவது.
அதன் தீர்வு : 10
தகுந்த மருத்துவரை அணுகி அதற் கான சிகிச்சையினை உடனடியாக மேற்கொண்டு அதன்படி நடப்பது. உடற்பயிற்சி, தியானம், யோகா மற்றும் உங்களுக்கு பிடித்த விளை யாட்டுகளில் ஈடுபடுவது போன்ற வற்றில் கவனம் செலுத்தும்போது உங்கள் உடல் மற்றும் மனம் புதிய பலம் பெரும்.
வரும் காரணம் : 11
தான் நினைத்தது நடக்காமல் இருக்கும் சமயத்தில் ஆவேச மும், எரிச்சலும் அதிகரிக்கும் போது….
அதன் தீர்வு : 11
எந்த ஒரு காரியம் நடக்க வேண் டுமென்றால் காலமும், நேரமும் கைகூடும்வரை காத்திருக்க வே ண்டும்.  பொறுமையை வளர்த்து க் கொள்ளுங்கள். நீங்கள் கொண் டிருக்கும் குறிக்கோளை அடைவீ ர்கள்.
வரும் காரணம் : 12
நேரம்காலம்தெரியாமல் செல் போன் அழைப்புகள் வருவது..
அதன் தீர்வு : 12
செல்போன் அழைப்புகளை ஒரு குறிப் பிட்ட நேரத்தில் மட்டும் ஏற்றுக் கொண் டு பதிலளியுங்கள். மற்றநேரத்தில் ‘சை லன்ட் மோட்’இல் வைத்துக்கொள்ள முயலுங்கள். ‘தலை போகும் காரியத்திற்கு’ மட்டு ம் மதிப்பு கொடுங்கள். நல்ல தே நடக்கும் என்று எப்போது ம் நம்பிக்கை கொள்ளுங்க ள். மனஅழுத்தம் என்பது மன தில்ஏற்பட்ட  காயங்களை அடிக்கடி நினைவுகளின் மூலம் வெளிக்கொண்டு வந்து, அதன்மூலம் வீணான கற் பனைகளை வளர்த்து, விபரீத எண் ணங்களை உருவாக்கி, ஆபத் தான செயலில் முடிவது. மனஅழுத்தத்தின் வேகம் அசுர வே கம். எதையும் சிந்திக் காமல், சூழ்நிலைகளை மறக் கச் செய் து ஆபத்தான முடிவெ டுக்கும் ஆற்றல் கொண்டது.  பொது வாக மன அழுத்தத்தை தடுக்க, எதையுமே திட்டமிட்டு ச் செய்யுங்கள். அதனால் செ யல்களை செய்வதற்கு அதிக நேரம் கிடைக்கும் . நிதானமா க, நினைத்த நேரத்தில் வெற்றி கரமாக செய் துவிடலாம்.
திட்டமிடுவோம்! மன அழுத்தம் ஏற்படுவதை தடுப்போம் !
மன அழுத்த‍ம் ஏற்படுவதற்கான காரணங்களும் அதற்கான தீர்வுகளும்! மன அழுத்த‍ம் ஏற்படுவதற்கான காரணங்களும் அதற்கான தீர்வுகளும்! Reviewed by நமதூர் செய்திகள் on 23:34:00 Rating: 5

No comments:

Powered by Blogger.