பெரம்பலூரில்பேருந்து மோதியதில் இளைஞர் சாவு



பெரம்பலூரில், பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
பெரம்பலூர் புதிய வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா மகன் செல்வகுமார் (32). இவர் வியாழக்கிழமை மாலை பெரம்பலூர் தலைமை அஞ்சல் அலுவலக தெருவிலிருந்து, பழைய பேருந்து நிலையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, அங்குள்ள ஸ்ரீராம் காம்ப்ளக்ஸ் அருகே உள்ள வளைவில் மோட்டார் சைக்கிள் சென்றபோது, அவ்வழியே சென்ற அரசு நகர பேருந்தின் சக்கரத்தில் மோட்டார் சைக்கிள் சிக்கியது.
இதில், சம்பவ இடத்திலேயே செல்வகுமார் உயிரிழந்தார்.
இதுகுறித்து விபத்தை நேரில் பார்த்த துரைராஜ் (34) அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜே. சர்புதீன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.
பெரம்பலூரில்பேருந்து மோதியதில் இளைஞர் சாவு பெரம்பலூரில்பேருந்து மோதியதில் இளைஞர் சாவு Reviewed by நமதூர் செய்திகள் on 20:03:00 Rating: 5

No comments:

Powered by Blogger.