இலவச ஆயத்த ஆடைகள் வடிவமைத்தல் பயிற்சி பெற அழைப்பு


இலவச ஆயத்த ஆடைகள் வடிவமைத்தல் பயிற்சி பெற அழைப்பு

பெரம்பலூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தில் பெண்களுக்கான இலவச ஆயத்த ஆடைகள் வடிவமைப்பு பயிற்சி பெறலாம்.
இதுகுறித்து மைய இயக்குநர் ஜி. பார்த்தசாரதி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில், ஜன. 20 முதல் பெண்களுக்கான ஆயத்த ஆடைகள் வடிவமைத்தல் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. 18 முதல் 40 வயதிற்கு குறைவாகவும், 10-ம் வகுப்பு படித்தவராகவும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், சுயதொழில் தொடங்குவதில் ஆர்வமுள்ளவராகவும் இருக்க வேண்டும். தொடர்ந்து 21 நாள்கள் நடைபெறும் பயிற்சி காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். பயிற்சிக் காலத்தில் மதிய உணவு இலவசமாக வழங்கப்படுவதோடு, தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
விருப்பமுள்ளோர் பெரம்பலூர் ரெங்காநகரில் உள்ள ஐ.ஓ.பி. கிராமிய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குநரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித்தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல், 4 பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, ஐ.ஓ.பி. சுய கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி மையம், ரெங்காநகர் (வாசுகி பால்ராஜ் மருத்துவமனை அருகில்), ஆத்தூர் சாலை, பெரம்பலூர், போன் - 277896 என்ற முகவரியில் தொடர்புகொள்ளலாம்.
இலவச ஆயத்த ஆடைகள் வடிவமைத்தல் பயிற்சி பெற அழைப்பு இலவச ஆயத்த ஆடைகள் வடிவமைத்தல் பயிற்சி பெற அழைப்பு Reviewed by நமதூர் செய்திகள் on 20:18:00 Rating: 5

No comments:

Powered by Blogger.