ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு


பெரம்பலூரில் மாவட்ட ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது.
வி. களத்தூர் ஊராட்சித் தலைவர் நூரூல்ஹிதா தலைமை வகித்தார். ஒன்றிய கூட்டமைப்புத் தலைவர்கள் சங்கர், ரவிச்சந்திரன், சக்திவேல், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கெüரவத் தலைவர்களாக எளம்பலூர் ஏ.சி. ராமசாமி, அன்னமங்கலம் குதரத்துல்லா, மாவட்டத் தலைவராக கவுள்பாளையம் செல்வகுமார், மாவட்டத் துணைத் தலைவராக குன்னம் இளங்கோவன், மாவட்டச் செயலர்களாக பரவாய் ராஜேந்திரன், செங்யூர் முத்தையா, குரும்பாபாளையம் ராஜ்குமார், மாவட்டப் குணம் தனராசு, தேவைபொருளாளராக பாடாலூர் வேல்முருகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளராக வாலிகண்டபுரம் ரவிச்சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக சரவணன், ராமையா, கோவிந்தராஜ், பழனிமுத்து, சசிகலா, பூஞ்சோலை, ராஜேந்திரன், ராமராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  அதைத் தொடர்ந்து, பெரம்பலூரில் நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவில் கூட்டமைப்பு சார்பில் பிப். 8-ல் நடைபெறும் விழாவைச் சிறப்பாக நடத்துவது. அனைத்து ஊராட்சிகளுக்கும், அதிகளவிலான புத்தகம் வாங்குவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.     
ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு Reviewed by நமதூர் செய்திகள் on 23:31:00 Rating: 5

No comments:

Powered by Blogger.